Published : 14 Oct 2019 05:20 PM
Last Updated : 14 Oct 2019 05:20 PM
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து பாகிதான் ஊடகங்கள், ''பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது.
இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்திற்கு 37 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT