Published : 12 Oct 2019 03:34 PM
Last Updated : 12 Oct 2019 03:34 PM
நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்ளும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க அந்நாடு தயாராகி உள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ, “சீன அதிபர் ஜி ஜின்பின் நேபாளத்திற்கு வருகை தருவதை தொடர்ந்து நேபாளத்தின் முக்கிய சாலைகளில் சீன - நேபாள கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும் சீன அதிபர் முகம் பதித்த பதாகைகளும் இடப்பெற்றுள்ளன. நேபாள தலைநகர் காதமாண்டிற்கு மாலை 4.30 மணியளவில் ஜி ஜின்பிங் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜி ஜின்பிங் நேபாள அதிபர் பிந்தியா தேவி பந்தாரியை விருந்து ஒன்றில் சந்திக்கிறார்.
மேலும், நேபாள முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடனும் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
நேபாள பயணத்தை முடிந்து கொண்டு ஜி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை சீனா புறப்படுகிறார்.
முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பி்ங், இந்திய பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடந்தன.
இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பு, எல்லைப்புற பிரச்சினைகள், வர்ததகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT