நேபாளத்தில் பேருந்து விபத்து: 14 பேர் பலி; 98 பேர் காயம்

நேபாளத்தில் பேருந்து விபத்து: 14 பேர் பலி; 98 பேர் காயம்
Updated on
1 min read

நேபாளத்தில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர். 98 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏஎன் ஐ, “ நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில் பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் 14 பேர் பலியாகினர். 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 98 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் துலிகெல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்ரூ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், “ அதிகப்படியான பயணிகளை பேருந்தில் ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம். மேலும் பேருந்தின் டயரும் பஞ்சராகி உள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் மோசமான சாலை காரணமாக அங்கு விபத்துகள் ஏற்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.இதனை நேபாள அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நாளுக்கு நாள் குரல்கள் வலுத்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in