

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைத் தொடர்ந்து சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது போலந்து.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் காந்தியின் பிறந்த நாளுக்கு தங்கள் வாழ்த்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில் காந்தியின் 150-வது பிறந்த நாளைத் தொடர்ந்து சிறப்பு தபால் தலையை போலந்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் சிறப்பு தபால் தலை வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலந்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைத் தொடர்ந்து போலந்து தபால் துறை மகாத்மா காந்திக்கு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.
பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூர்ந்துள்ளன.
போலாந்து வெளியிட்ட தபால் தலை