Published : 03 Oct 2019 06:44 PM
Last Updated : 03 Oct 2019 06:44 PM

தென் கொரியாவைத் தாக்கிய மிடாக் புயல்

தென்கொரியாவைத் தாக்கிய மிடாக் புயலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளனர்,

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “மிடாக் புயல் தென்கொரியாவை புதன்கிழமை இரவு தாக்கியது. இதன் காரணமாக கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக புசான் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 500 மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளதால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிடாக் புயலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணி விரைவாக நடந்து வருவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது. புயல் வியாழக்கிழமை முழுவதுமாக கரையைக் கடக்கும் என்றும் இதன் காரணமாக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தென் கொரிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x