Published : 20 Sep 2019 04:00 PM
Last Updated : 20 Sep 2019 04:00 PM
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய இமெல்டா புயலுக்கு இதுவரை 2 பேர் பலியாயுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் , ”இமெல்டா புயல் டெக்சாஸ் மாகாணத்தை வியாழன்று தாக்கியது. இதில் 2 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக சுமார் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லூசியானா மாகாணத்திலும் இமெல்டா புயலின் தாக்குதல் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
’ஹவுடி மோடி’ நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?
டெக்சாஸ் மாகாண தலைநகரான ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ம் தேதி நடக்கும் இந்திய, அமெரிக்கர்கள் மாநாடான 'ஹவுடி, மோடி' கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி, அதற்கு முன்னதாக ஹாஸ்டனில் இந்திய வம்சாவளி மக்களின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
இந்த நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக ’ஹவுடி மோடி’ நிகழ்வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் முன் பேச உள்ளார். இதற்கு முன் 2014-ம் ஆண்டில் நியூயார்க்கில் மாடிஸன் சதுக்கத்திலும், கடந்த 2016-ம் ஆண்டில் சிலிக்கான் வேலியிலும் பிரதமர் மோடி பேசி இருந்தார்.
ஹவுடி (Howdy) என்பது ஆங்கிலத்தில் 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?' (‘How do you do?’) என்பதின் சுருக்கமாகவே 'ஹவுடி' என்று அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் மக்கள் அழைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT