Published : 20 Sep 2019 01:55 PM
Last Updated : 20 Sep 2019 01:55 PM

அமெரிக்காவுடனான மோதலுக்கிடையே ஐ. நா. கூட்டத்தில் பங்கேற்கும் ஈரான் அமைச்சர்

ஐ.நா.கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை நியூயார்க் புறப்பட்டுச் சென்றதாக அந்நாடு அறிவித்துள்ளது.

சவுதி எண்ணெய் ஆலை தாக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே கடும் மோதல் வலுத்து வருகிறது. ஈரானுக்கு எதிராக சவுதியுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் 74-வது ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவ்த் சாரிஃப் வெள்ளிக்கிழமை அதிகாலை நியூயார்க் புறப்பட்டுச் சென்றதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஈரானுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துவிட்டால் பொதுக் கூட்டத்தை ஈரான் புறக்கணிக்கக் கூடும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நியூயார்க் சென்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x