இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 
Updated on
1 min read

இந்தோனேசியாவில் இன்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எற்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தியில், ''இந்தோனேசியாவில் ஜாவா தீவுப் பகுதியில் வியாழக்கிழமை இடைவெளிவிட்டு இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், 5.5 ஆகவும் பதிவாகின'' என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக 2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதியாக இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in