Published : 18 Sep 2019 04:39 PM
Last Updated : 18 Sep 2019 04:39 PM
பிராந்தியத்தில் ஏற்படும் மோதலுக்கு சவுதியும் அமெரிக்காவும்தான் காரணம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''நாங்கள் இந்தப் பிராந்தியத்தில் மோதலை ஏற்படுத்த விரும்பவில்லை. யார் இந்த மோதலை ஏற்படுத்தினார்கள் ஏமன் நாட்டவரா இல்லை. சவுதி, ஐக்கிய அமீரகம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல். இந்த நாடுகள் பிராந்தியத்தில் போரை எற்படுத்தின.
முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தாக்குதலை ஏமனில் சவுதி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கூறிய நிலையிலும், ஈரான் தான் இதன் பின்னணியில் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.
சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலை ஈரான் நடத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சவுதி, அமெரிக்க விசாரணைக் குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT