Published : 17 Sep 2019 05:14 PM
Last Updated : 17 Sep 2019 05:14 PM

இஸ்ரேலில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல்: மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா நெதன்யாகு?

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இன்று பொதுத் தேர்தல் நடந்து வருகிறது.

ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு.

மேலும் இந்த தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்தன.

எனினும் தொடர்ந்து கட்சிகளை இழுத்து கூட்டணி அமைக்க முடியாததால் அரசு அமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதமர் நெதன்யாகு, ஊழலுக்காகச் சிறைக்குப் போக வேண்டியிருப்பதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட நெதன்யாகு கடுமையான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேலில் இன்று (செவாய்க்கிழமை) பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. மக்கள், தலைவர்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்து கணிப்புகளில் முடிவுகளில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. பெரும்பான்மையை பெற சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் கட்சிகள் இடையே கூட்டணிகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் மூன்றில் ஒரு பகுதியை இஸ்ரேலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்படும் என்று நெதன்யாகு தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x