Published : 16 Sep 2019 05:15 PM
Last Updated : 16 Sep 2019 05:15 PM

சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரம்; யார் மீதும் பழிசுமத்த வேண்டாம் - அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்த சீனா

உண்மையான நிலவரம் தெரியாமல் யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என்று சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதல் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் ஆரம்கோவின் அப்கய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.இந்த ஏண்ணெய் ஆலைகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஏமனில் இயங்கு ஹவுத்தி தீவிரவாதிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளது என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு ஈரான் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுதி எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்த வேண்டாம் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, “ சவுதி எண்ணெய் ஆலை நிறுவனங்கள் தாக்கப்பட்டது குறித்து உண்மையான நிலவரம் தெரியாமல் குற்றம் சுமத்த வேண்டாம். இது தொடர்பாக அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் இருப்போம் என்று சீனா நம்புகிறது” என்று தெரிவித்தார்.

இதன் மூலம் ஈரானை மறைமுகமாக குற்றசாஞ்சாட்டிய அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x