Published : 16 Sep 2019 09:14 AM
Last Updated : 16 Sep 2019 09:14 AM

காஷ்மீர் இந்தியாவின் ஒரு  பகுதி; ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இங்கிலாந்து எம்.பி. வலியுறுத்தல்

இங்கிலாந்து எம்பி. பாப் பிளாக் மேன்: படம் உதவி ட்விட்டர்


லண்டன்


ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் மாற்றமில்லை. பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி. பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்

இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் சார்பில் தியாகிகள் தினம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இந்தியா ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை திரும்பப் பெற்றது.இந்த விஷயத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப திட்டமிட்டுள்ளது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் முழுமையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஐநாவில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தால் அதை உறுப்பு நாடுகள் தோற்கடிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை நீக்கியதை நான் தீவிரமாக ஆதரிக்கிறேன். வலிமையான, முறையான தலைவர் இருப்பதை பாஜக உணர்த்துகிறது. ஜம்மு காஷ்மீரை முறைப்படி இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இது சரியான தருணம்.

ஜம்மு காஷ்மீர் குறித்து எதிர்மறையான கருத்துக்களை இங்கிலாந்து எம்.பி.க்கள் தெரிவிப்பது குறித்து கவலை கொண்டு பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் ஐநாவில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன், அந்த நாடு ஆக்கிரமிப்பு காஷ்மர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். ஜம்மு காஷ்மீர் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி

இவ்வாறு பாப் பிளாக்மேன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x