Published : 14 Sep 2019 06:49 PM
Last Updated : 14 Sep 2019 06:49 PM

பிரேஸில் மருத்துவமனை தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேசிலில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் நகரில் மருத்துவமனை ஒன்றில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்களும் பலத்த காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விபத்து மின்சார ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளிருந்து நோயாளிகள் மீட்கப்பட்ட காட்சிகள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

பிரேசிலில் சமீபத்தில் நடந்த மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு பிரேசில் அரசு தனது இரங்கல் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x