Published : 22 May 2014 11:17 AM
Last Updated : 22 May 2014 11:17 AM

சீனாவில் அடுத்தடுத்து பயங்கர குண்டு வெடித்ததில் 31 பேர் பலி; 90 பேர் படுகாயம்

சீனாவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் 2 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

சம்பவம் நடந்த பகுதி அதிக கூட்டம் நிறைந்த பகுதி என்பதால் இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அங்கிருந்த 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7.50 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடிப்பின்போது பலத்த சப்தம் எழுந்ததாகவும், அதனை தொடர்ந்து மக்கள் அச்சத்துடன் வெளியேற முற்பட்டபோது அங்கு மற்றொரு குண்டுவெடித்ததாகவும் சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அல் கொய்தா அமைப்பின் கிளையான கிழக்கு துருக்கிய இஸ்லாமிய அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் இதே ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 79 பேர் படுகாயமடைந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x