Published : 10 Sep 2019 05:02 PM
Last Updated : 10 Sep 2019 05:02 PM

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்: ஐ.நா. கூட்டத்துக்கு வெளியே சிந்து மக்கள் போராட்டம்

ஜெனிவா
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெறும் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக சிந்து காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் ரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயல்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டு கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வருகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும் என பேசினார்.

இந்தநிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக சிந்து காங்கிரஸ் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அந்த மக்கள் தங்கள் பகுதியில் பாகிஸ்தான் அரசு அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறி அப்போது முழுக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x