Published : 10 Sep 2019 01:50 PM
Last Updated : 10 Sep 2019 01:50 PM
புதுடெல்லி
இந்தியா - நேபாளம் இடையிலான பெட்ரோலிய பைப் லைன் திட்டத்தை இருநாட்டு பிரதமர்களும் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.
இமயமலை பகுதி நாடான நேபாளத்தில் கச்சா எண்ணெய் பொருட்களை எடுத்துச் செல்ல முழுக்க முழுக்க போக்குவரத்தையே நம்பி இருக்கும் சூழல் உள்ளது.
இந்தியாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலமே பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை நேபாளத்துக்கு டுத்துச் செல்லப்படுகிறது. 1973-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்படி பெட்ரோலிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பைல் பைலன் மூலம் பெட்ரோலிய பொருட்களை அனுப்ப 1996-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவின் மோதிகாரியில் இருந்து நேபாளத்தின் அமேலக்கஞ்ச் இடையே பைப் லைன் அமைக்கும் திட்டம் 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
எனினும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பணிகள் முடிந்து இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் சர்மா ஓலியும் வீடியோ லிங் மூலம் இதனை தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தெற்காசியாவில் ஒருநாட்டின் எல்லையை தாண்டி மற்றொரு நாட்டுக்கு பைப் லைன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் செய்யும் முதல் திட்டமாக இது உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT