Published : 08 Sep 2019 08:19 PM
Last Updated : 08 Sep 2019 08:19 PM
வாஷிங்டன்
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புக்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் 17 பேர் பாகிஸ்தான் வந்தனர்.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் டேவிட் முகாமில், ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆப்கன் அதிபருடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தேன். ஆனால் ஒரு அமெரிக்க வீரர் மற்றும் 11 பேர் உயிரிழக்க காரணமாக தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். நான் உடனடியாக சந்திப்பையும், அமைதி பேச்சுவார்த்தையையும் ரத்து செய்துவிட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT