Published : 05 Sep 2019 05:33 PM
Last Updated : 05 Sep 2019 05:33 PM

யுரேனியம் தயாரிப்பு; ஈரான் தீவிரம்


2015 மேற்கொள்ளப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் உள்ள சில நிபந்தனைகளை மீறி யுரேனியம் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் கூறும்போது, ‘‘அணுசக்தி ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம். எனவே இது தொடர்பாக உள்ள ஓப்பந்தகை கைவிட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

இதன் மூலம் 2015 ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள நிபந்தனைகளை ஈரான் மீற உள்ளது. மேலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை அதிகரிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அணுஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x