Published : 05 Sep 2019 02:56 PM
Last Updated : 05 Sep 2019 02:56 PM
அமெரிக்காவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய தம்பதிகள் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கர்ஸ் தீவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபடுவதற்காக 33 பேர் படகு ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது கடற்கரையில் நின்றுக் கொண்டிருந்த படகில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதில் கப்பலில் இருந்த ஊழியர்கள் நீச்சல் தெரிந்ததால் கடலில் விழுந்து தப்பித்து கொண்டனர்.
இதில் படகில் மிதமிருந்த அனைவரும் தீக்கு பலியாகி உள்ளதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகளும் அடக்கம. இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “ நாக்பூரை சேர்ந்த மருத்துவர் சதிஷ் மகள் சன்ஜரி மற்றும் மருமகன் நிர்மல் ஆகியோர் இரண்டு வருடங்களுக்கும் முன்னர் அமெரிக்காவுக்கு சென்று பின்னர் அங்கேயே வருகின்றனர். நிர்மல் அங்குள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து மருத்துவரின் குடும்பம் தரப்பில் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT