மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் ரஷ்யா

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்
Updated on
1 min read

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை ரஷ்யா வெளியிடவுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றார்.

இந்தச் சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், அணு சக்தி, பாதுகாப்பு, விமானம், கடல்சார் தொடர்பு, போக்குவரத்து கட்டமைப்பு, உயர் தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றில் ரஷ்யா - இந்திய இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் வெங்கடேஷ் ஷர்மா சந்தித்தார்.

அப்போது வெங்கடேஷ் ஷர்மா கூறும்போது, “மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனை தனது செய்தியாளர் சந்திப்பிலும் புதின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று அவரை கவுரப்படுத்தும் ரஷ்யாவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in