Published : 03 Sep 2019 09:19 PM
Last Updated : 03 Sep 2019 09:19 PM

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன், ஏ.எப்.பி.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.
ப்
இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவான லிபரல் டெமாக்ரசிக் கட்சியில் இணைந்தார்.

“லிபரல் டெமாக்ரட் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் பிராக்னல் எம்.பி. பிலிப் லீ கட்சியில் இணைந்தார்” என்று லிப் டெம்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் ஜோ ஸ்வின்சன் கூறும்போது, “ஐரோப்பிய ஒன்றையத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் சீரழிவிலிருந்து லீ காப்பாற்றியுள்ளார்.” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x