Published : 27 Aug 2019 04:51 PM
Last Updated : 27 Aug 2019 04:51 PM

சிரியா, இட்லிப் மாகாணத்தில் கடும் சண்டை: 51 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியான இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் இருதரப்பிலும் சேர்த்து 51 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்பு குழு ஒன்று செவாய்க்கிழமை கூறும்போது, “ கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான இட்லிப் மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய அரசுப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஷிக்குன் பகுதியில் இரு தரப்பும் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். இதில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 20 பேரும் அரசுப் படைகள் தரப்பில் 23 பேரும் என 51 பேர் பலியாகினர்.

தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இதில் இறுதி போர் இட்லிப் மாகாணத்தில் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x