Published : 27 Aug 2019 11:28 AM
Last Updated : 27 Aug 2019 11:28 AM

அமேசான் காட்டுத் தீ; ஜி -7 நாடுகளின் உதவியை நிராகரித்த பிரேசில்


அமேசான் காட்டுத் தீயை அணைக்க, ஜி - 7 நாடுகளின் உதவியை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது.

உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் உலக மக்களுக்கான 20 சதவீத ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது. இதன் மழைக்காடுகளில் காட்டுத் தீ பரவிவருவதால் உலகின் பருவநிலைகளில் எதிரான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். அமேசானின் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மரங்கள் அழிந்து வருவதை தடுக்க பிரேசில் அதிபர் ராணுவத்தை அனுப்பியுள்ளார்.

இத் தீயைத் தடுக்க மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படுவதால் அமேசானை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் பங்கேற்கும் ஜி7 மாநாட்டிலும் அமேசான் ஒரு முக்கிய பொருளாக பேசப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசாம் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையி ஜி - ,7 நாடுகள் கோரிய உதவியை பிரேசில் அரசு நிராக்கரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜெர் போல்சோனராவின் அலுவலகத்தின் மூத்த அதிகாரியான லோரென்சோனி கூறும்போது, “ ”நாங்கள் ஜி - நாடுகளின் உதவியை பாராட்டுக்கிறோம். ஆனால் இதனை அவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மறு சீரமைப்புக்கு பயன்படுத்தலாம். பிரான்ஸின் உலக பிரசித்து பெற்ற தேவலாயத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாதவர் மக்ரோன். அவர் என்ன பிரேசில் நாட்டுக்கு பாடம் புகட்டுகிறார்” என்றார்.

மேலும் பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு காலனித்துவம் எண்ணம் இருப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x