Published : 23 Aug 2019 12:55 PM
Last Updated : 23 Aug 2019 12:55 PM
பிரேசிலில் அமேசான் மழைக் காடுகளை விவசாயிகள் சட்ட விரோதமாக பற்ற வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள பிரேசில் அதிபர் இதில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் அமைந்துள்ள மழைக் காடுகள் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான அரியவகை மரங்கள் மற்றும் வனவிலங்குகள் பலியாகியுள்ளன.
பிரேசிலில் இந்த ஆண்டு மட்டும் 72,843 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 9,000-க்கும் அதிகமான தீ விபத்துகள் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 80% அதிகமாகும் என்று பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமேசான் காட்டுத் தீ குறித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் காடுகள் தீக்கிரையாகிய புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் #SaveAmazon என்ற ஹாஷ்டேக்குடன் பரவலாக பகிரப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரபலங்களும் அடக்கம்.
அமேசானில் எற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் ஆண்டோனியா ஆகியோர் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரேசில் அதிபர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அமேசான் காட்டுத் தீயை விவசாயிகள் ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் இதில் உலக நாடுகள் தலையிட வேண்டம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாங்கள் போரை எதிர்கொண்டுள்ளோம். இந்த தீ விபத்துகள் ஏதோ திட்டத்தின் பின்னணியில் ஏற்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் இந்த காட்டுத் தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக ஜெய்ர் போல்சோனரோ முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT