Published : 18 Aug 2019 10:23 AM
Last Updated : 18 Aug 2019 10:23 AM

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் பேரணி

போராட்டக்கார்ரகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் இன்று ஹாங்காங்கில் பேரணி சென்றனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஹாங்காங்கில் ஒரு மாதத்துக்கு மேலாக சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் போராட்டக்கார்ரகளுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியர்கள் பலர் ஹாங்காங்கின் முக்கிய விதிகளில் இன்று (சனிக்கிழமை) பேரணி சென்றனர். அப்போது ’எதிர்கால சந்ததியினரை பாதுகாப்போம்’ என்று கோஷமிட்டு கையில் குடையுடன் சென்றனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேரணி குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ”போராட்டக்காரர்களுக்கு அரசு அதன் பதிலை அளிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பது எங்கள் உரிமை. ஹாங்காங்கில் நடக்கும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக் கூறியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் சீனாவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x