Published : 16 Aug 2019 05:30 PM
Last Updated : 16 Aug 2019 05:30 PM

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கவுட்டா நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுட்டா நகரில் குச்லக் பகுதியில் உள்ள மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டு வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குத்லுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கவுட்டா நகரில் கடந்த 4 வாரத்தில் மட்டும் 4-வது முறையாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

பலுசிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x