Published : 09 Aug 2019 11:52 AM
Last Updated : 09 Aug 2019 11:52 AM
சீனாவில் ‘லெகிமா’ புயல் தாக்க இருப்பதால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ரெட் அலர்ட் (அதிகப்பட்ச மழை பொழிவு எச்சரிக்கை) விடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது
இது குறித்து சீனாவின் வானிலை ஆய்வு மையம் கூறும்போது, “ 2014 -ம் ஆண்டுக்குப் பிறகு சக்தி வாய்ந்த புயலான ‘லெகிமா’ சனிக்கிழமையன்று சீனாவின் கிழக்குப் பகுதிகளை தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும்.
இதன் காரணமாக அப்பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடும் மழை பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கிழக்குப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதால், பொது மக்கள் கவனமாக இருக்குமாறு சீனாவின் நீர் வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவை பொறுத்தவரை அங்கு கோடை காலங்களின் இறுதியில் புயல் தாக்குவது வழக்கமான ஒன்றுதான் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT