Published : 02 Aug 2019 11:50 AM
Last Updated : 02 Aug 2019 11:50 AM

ஆண்களிடம் அனுமதி பெற்று வெளிநாடு செல்ல வேண்டும்: பெண்கள் மீதான தடையை நீக்கியது சவுதி அரசு

சவுதிப் பெண்கள், இனி ஆண்கள் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் செல்ல  அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து சவுதி அரசு தரப்பில், “நாட்டுக்கு வெளியே செல்ல விரும்பும் சவுதியின் எந்த குடிமகளும்,  விண்ணப்பம் அளித்தால் அவர்களுக்கான பாஸ்போர்ட் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

21 வயதை தாண்டிய எந்த பெண்மணியும் அவர்களுடைய காப்பாளர்கள் அனுமதி இல்லாமல், பாஸ்போர்ட் இருந்தால் வெளி நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று சவுதி அரசு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சவுதியில், பெண்கள் அமைப்புகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

சவுதியில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்துக்காக சவுதி மன்னர் சல்மானும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக  பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார்.

 

வரும் 2020-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பெண்கள் விளையாட்டு மைதானங்களுக்கு வரவும் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x