Published : 01 Aug 2019 11:26 AM
Last Updated : 01 Aug 2019 11:26 AM

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: ஒரு லிட்டர் பெட்ரோல் 117 ரூபாய்

பொருளாதாரத் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை  5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம்  அந்நாட்டில்  ஆகஸ்ட் மாதத்துக்கான விலையை நிர்ணயித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு   5. 38 ரூ உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி ரூ.112.68 -க்கு( பாகிஸ்தான் ரூபாய்) விற்ற பெட்ரோல் தற்போது 117 .83 ரூபாய்க்கு   விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் விலையும் ரூ 5.38 ஆக அதிகரித்துள்ளது. 

 

பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான் பாகிஸ்தானில்  சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இதனை சீர் செய்யும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறங்கி இருக்கிறார்.

இதன் முயற்சியாக பிரதமர் இம்ரான் கான் நாடு முழுவதும் ரொட்டி,  நான் துண்டுகளின் விலையை அதன் உண்மை விலைக்கு விற்கும்படி உத்தரவிட்டார். இந்த நிலையில்  அங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x