Published : 31 Jul 2019 04:00 PM
Last Updated : 31 Jul 2019 04:00 PM

பொருளாதார நெருக்கடி: உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உத்தரவிட்ட இம்ரான் கான்

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பிரதான உணவு வகைகளின் விலைகளைக் குறைக்குமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கானின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பிரதமர் இம்ரான் கான் நாடு முழுவதும் ரொட்டி,  நான் துண்டுகளின் விலையை அதன் உண்மை விலைக்கு விற்கும்படி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இத்தகைய அறிவிப்பை பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானில் ரொட்டித் துண்டுகள் விலை  ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகின்றன. இதற்கு முன்னர் ரொட்டியின் விலை ரூ.7 முதல் - ரூ.8 வரை விற்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்தது.

இதற்கிடையில் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான்  சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x