Published : 31 Jul 2019 12:55 PM
Last Updated : 31 Jul 2019 12:55 PM

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென் கொரியா குற்றசாட்டு

வடகொரியா குறுகிய தொலைவு சென்று தாக்கக் கூடிய இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென் கொரியா தரப்பில், “ 250 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக் கூடிய இரு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இது முன்னர் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளிலிருந்து வேறுபட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் லீ பீட்டர்ஸ் கூறும்போது,  “ வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்றார் .

சமீபத்தில்  வடகொரியாவால் நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை சோதனைகளும், தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து கொரிய கடற்பகுதியில் ராணுவ ஒத்திகை நடத்தியதற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அந்நாடு கூறியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

அமெரிக்கா - வடகொரியா மோதலும் இணக்கமும்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x