Published : 24 Jul 2019 11:05 AM
Last Updated : 24 Jul 2019 11:05 AM
இரும்புத் தொழில்துறையில் உச்சம் தொட்ட தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் சகோதரும் தொழிலதிபருமான பிரமோத் மிட்டல் மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். போஸ்னியா நாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பிரமோத் மிட்டல் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து பங்குதாரராக உள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில் நிதி மோசடி நடந்துள்ளதாகவும், அதிகார துஷபிரயோகம் மூலம் பொருளாதாரக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பிரமோத் மிட்டல், அந்தத் தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று பேரை போஸ்னியா போலீஸார் கைது செய்துள்ளனர். 4-வதாக சந்தேகப்படப்படும் மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், ஒவ்வொரு நபருக்கும் 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
போஸ்னியா நாட்டின் Zurnal.info என்ற இணையதளம், பிரமோத் மிட்டலும் அவரது கூட்டாளிகளும், குறைந்தது ஐந்து மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக புகார் எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT