Published : 24 Jul 2019 10:36 AM
Last Updated : 24 Jul 2019 10:36 AM
வாஷிங்டன்
பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அந்த குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு சென்ற இம்ரான் கான் அந்நாட்டு எம்.பி.க்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவில் அல் கொய்தா தாக்குதல் நடத்திய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை அகற்றியதில் பாகிஸ்தானுக்கும் பெரும் பங்கு உண்டு.
தலிபான்கள் பாகிஸ்தானில் தற்போது இல்லை. இருப்பினும் 40 புதிய தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் எங்கள் முந்தைய அரசுகள் சரியான தகவல்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளாததால் தீவிரவாத இயக்கங்களை அகற்ற முடியாமல் போனது. இப்போது அதனை உணர்ந்துள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா எங்களுக்கு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT