Published : 23 Jul 2019 07:51 AM
Last Updated : 23 Jul 2019 07:51 AM
ராமேசுவரம்
இலங்கையில் அவசர நிலையை ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீட்டிக்க அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏப்.21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்கு தலில் இந்தியர்கள் உட்பட 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிர வாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் ஏப்.24 முதல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை காவல் துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள், ராணுவத்தினரின் வசமாயின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத் தினர் சோதனைச்சாவடிகள் அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவசர நிலை ஆக. 22 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் தற்போது நிலவும் சூழலில் மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலையை அமல்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், சமூகங்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ராணு வத்துடன் இணைந்து போலீஸார் செயல்படுவர் எனக் கூறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT