Published : 05 Jun 2015 11:22 AM
Last Updated : 05 Jun 2015 11:22 AM
கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் எரிவாயு விற்பனை நிலையம் வெடித்துச் சிதறியதில் 73 பேர் உயிரிழந்தனர்.
அக்ரா நகரின் மையப்பகுதியில் உள்ள குவாமி எங்க்ருமா சதுக்கம் அருகே எரிவாயு விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் புதன்கிழமை இரவு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 73 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை முதல் உடல்களை மீட்கும் பணி தொடங்கியது. விபத்துக் கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT