Last Updated : 26 Jun, 2015 12:33 PM

 

Published : 26 Jun 2015 12:33 PM
Last Updated : 26 Jun 2015 12:33 PM

மெர்ஸ் நோய்: தென் கொரியாவில் பலி 31 ஆக அதிகரிப்பு

தென் கொரியாவில் புதிதாக ஒருவருக்கு மெர்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்பால் மேலும் இருவர் பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த மே 20-ம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் 'மெர்ஸ்' (மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மூச்சுத்திணறல் நோய்) தாக்கியது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்நாட்டில் நோயின் பாதிப்பு தீவிரமடைந்தது.

தற்போதைய நிலையில், 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், நோய் பாதிப்பினால் தனிமையில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 3000-ஐ எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x