Published : 07 Jun 2015 11:42 AM
Last Updated : 07 Jun 2015 11:42 AM

சீன சொகுசு கப்பல் விபத்து: பலி எண்ணிக்கை 396 ஆக உயர்வு

சீன சொகுசு கப்பல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 46 பேரை காணவில்லை. அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப் பில்லை என்ற நிலையில் உடல் களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கடந்த 1-ம் தேதி சீனாவின் யாங்ஸி நதியில் ஜியான்லி பகுதியில் சென்று கொண் டிருந்த ‘ஈஸ்டன் ஸ்டார்’ என்ற சொகுசு கப்பல் புயலில் சிக்கி தண்ணீரில் மூழ்கியது. அந்த கப்பலில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 456 பேர் இருந்தனர். அவர்களில் கப்பல் கேப்டன், தலைமை பொறியாளர் உட்பட 14 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

சம்பவ பகுதியில் நேற்று முன்தினம் வரை 97 உடல்கள் மீட்கப்பட்டன. கப்பலுக்குள் சிக்கி யவர்களை மீட்க முடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட நீர்மூழ்கி வீரர் கள் தண்ணீரில் மூழ்கி தேடியும் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இழுவை கப்பல்களில் பொருத்தப்பட்ட ராட்சத கிரேன்கள் மூலம் ‘ஈஸ்டன் ஸ்டார்’ கப்பல் நதியின் மேற் பரப்பில் தூக்கி நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இது வரை மொத்தம் 396 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த உடல் களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதற் காக உயிரிழந்த பயணிகளின் உறவினர்களுக்கு டி.என்.ஏ. பரி சோதனை நடத்தப்படுகிறது.

கப்பலில் பயணம் செய்த 46 பேரை காணவில்லை. அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப் பில்லை என்ற நிலையில் அவர் களின் உடல்களை தேடும் பணி தொடர்கிறது. மீட்புப் பணியில் சுமார் 150 கப்பல்கள், 5100 ராணுவ வீரர்கள், 59 கிரேன்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

உயிரிழந்த பயணிகளின் உற வினர்கள் சம்பவ பகுதியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

புயல் வீசியபோது யாங்ஸி நதியில் ஏராள மான கப்பல்கள் சென்று கொண் டிருந்தன. வேறு எந்த கப்பல் களுக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் ஈஸ்டன் ஸ்டார்’ கப்பல் மட்டும் நதியில் மூழ்கியது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x