Last Updated : 16 Jun, 2015 10:19 AM

 

Published : 16 Jun 2015 10:19 AM
Last Updated : 16 Jun 2015 10:19 AM

22 பேருடன் சென்ற மலேசிய கப்பல் மாயம்

மலேசியாவின் மலாகா பகுதியில் இருந்து 22 பேருடன் சென்ற எண் ணெய் கப்பல் நடுக்கடலில் மாயமாகிவிட்டது. அந்த கப்பலை கடற் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

எம்.டி. ஓர்கிம் ஹார்மோனி என்ற எண்ணெய் கப்பல் மலாக்காவில் இருந்து குவாந்தனுக்கு புறப்பட்டது. இதில் 6000 டன் எரிபொருள் இருந்தது. இந்த சரக்கு கப்பல் ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டது.

அந்த கப்பலில் 16 மலேசியர்கள், 5 இந்தோனேசியர்கள், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் இருந்தனர். மாயமான கப்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் கொள்ளையர்கள் கப்பலை கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கப்பல் மாயமானது குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், எண்ணெய் கப்பலில் பணியாற்றும் 22 ஊழியர் கள் பத்திரமாக நாடு திரும்ப வேண் டும் என்று பிரார்த்திக்கிறேன். அவர் களின் குடும்பத்தினரின் வேதனையை நானும் பகிர்ந்து கொள் கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x