Published : 28 May 2015 06:02 PM
Last Updated : 28 May 2015 06:02 PM
ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துக்குப் பிறகு இதுவரை 280 முறை பின் அதிர்வுகள் நேபாளத்தில் ஏற்பட்டுள்ளன.
வியாழக்கிழமையன்று நேபாளத்தில் 6 முறை மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலை 5.29 மணிக்கு ஏற்பட்ட மித நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக இருந்தது.
அதன் பிறகு தொலாகா மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 4.2 என்று பதிவான மித நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அதிகாலை 3.07 மற்றும் 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 என்று பதிவான 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
மீண்டும் நண்பகல் 12.14 மணியளவில் தோல்கா பகுதியை மையமாகக் கொண்ட, 4.1 ரிக்டர் அளவு மித நிலநடுக்கம் ஏற்பட்டது.
மொத்தத்தில் ஏப்ரல் 25-ம் தேதி மிகப்பெரிய பூகம்பத்துக்கு பிறகு நேபாளம் 280 முறை குலுங்கியுள்ளது.
ஏப்ரல் 25-ல் ஏற்பட்ட பூகம்பம் பிறகு மே 12-ம் தேதி ஏற்பட்ட 7.3 அளவு நிலநடுக்கங்களுக்கு சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர். 21,000 பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்க விளைவுகளிலிருந்து மீண்டு வர நேபாளம் போராடிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT