Last Updated : 05 May, 2015 06:24 PM

 

Published : 05 May 2015 06:24 PM
Last Updated : 05 May 2015 06:24 PM

கென்யாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு 45 பேர் பலியானதாக தகவல்

கென்யாவின் வடகிழக்கில் கால்நடைகளை திருட வந்த கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் துர்கானா மற்றும் போகோட் பகுதிகளில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த நபர்கள் திடீரென அங்கிருந்த அப்பாவி பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அவர்கள் நூற்றுக்கணக்கான கால்நடைகளை திருடிச்சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கென்யா, தென் சூடான், எத்தியோப்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்காக படுகொலைகள் நிகழ்வது அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x