Last Updated : 15 May, 2015 05:43 PM

 

Published : 15 May 2015 05:43 PM
Last Updated : 15 May 2015 05:43 PM

நேபாளத்தில் மாயமான யு.எஸ். ஹெலிகாப்டரின் சிதறல்கள் சிக்கின: 3 பேர் பலி

நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டபோது மாயமான அமெரிக்க ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடுக்கப்பட்டுள்ளன. அதில் சென்ற 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரான ஹியூ மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில், ஹியூ என்ற ஹெலிகாப்டர் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்பு பணியின் போது மாயமானது.

ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் 2 நேபாள ராணுவ அதிகாரிகளும் இருந்தனர்.

இந்த நிலையில் 4 நாட்கள் நடந்த தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சிதறல்கள் நேபாள மலைமுகடுகளில் முற்றிலும் சிதைந்த நிலையில் தென்பட்டது.

இதனை அடுத்து தொடர்ந்த தேடலில் 3 பேரின் உடல்கள் மட்டும் சிக்கியது. மற்றவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x