ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனைக் கொன்ற‌ தாய்க்கு 18 ஆண்டுகள் சிறை

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனைக் கொன்ற‌ தாய்க்கு 18 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

ஆட்டிஸம் என்ற குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த தனது 8 வயது மகனைக் கொலை செய்த லட்சாதிபதி தாய்க்கு நியூயார்க் நீதிமன்றம் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தர விட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிப்பவர் கிகி ஜோர்டான் (54). இவர் பல லட்சங்களுக்கு அதிபதி ஆவார். இவரின் முதல் கணவரான‌ ரேமண்ட் மிர்ரா என்ற தொழிலதிபர் மூலம் 8 வயதில் ஜூட் மிர்ரா என்ற ஒரு மகன் இருந்தார். அவர் ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருந்தார்.

2010ம் ஆண்டில் தனது மகனுக்கு பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளை அதிகளவில் கொடுத்து அவரின் இறப்புக்கு ஜோர்டான் காரண மானார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னுடைய இரண்டாவது கணவர் எமில் செகோவ் ஜூட் மிர்ராவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாகவும், அதனால் செகோவிட மிருந்து தனது மகனைக் காப்பாற்ற தான் இக்குற்றத்தைச் செய்ததா கவும் கூறினார்.

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம், தனது மகன் மாற்றுத்திறனாளி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத் தினால் அவரை ஜோர்டான் கொலை செய்ததாகக் கூறி அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in