Last Updated : 27 May, 2015 10:11 AM

 

Published : 27 May 2015 10:11 AM
Last Updated : 27 May 2015 10:11 AM

தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. வீரர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர் உயிரிழந்தார். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

மாலி தலைநகர் பமாகோவில் நேற்று முன்தினம் இரவு ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் வங்கதேச வீரர்கள் இருவர் ஐ.நா. வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்களை நோக்கி ஆயுதம் தாங்கிய சிலர் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தி யதில், ஒரு வீரர் உயிரிழந்தார். மற் றொருவர் படுகாயம் அடைந்தார்.

இவர்கள் மீது தாக்குதல் நடத்திய வர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மாலி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x