Published : 23 May 2015 10:46 AM
Last Updated : 23 May 2015 10:46 AM
நடுக்கடலில் தத்தளித்துக் கொண் டிருந்த 700 மியான்மர் அகதி களுக்கு இந்தோனேசியா, தாய் லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் அடைக்கலம் அளித்துள்ளன.
மியான்மர் நாட்டில் முஸ்லிம் களுக்கு எதிராக கலவரம் வெடித் துள்ளது. இதனால் அந்த நாட்டு முஸ்லிம்கள் படகுகள் மூலம் வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் மலேசியாவும் இந்தோனேசி யாவும் அகதிகள் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை.
அண்மையில் அகதிகளின் படகுகள் கவிழ்ந்து ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். இப்பிரச்சினை குறித்து மலேசியா, இந்தோனே சியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு உதவ முடிவு செய்தன.
அதன்படி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 700 மியான்மர் அகதிகளுக்கு மூன்று நாடுகளும் அடைக்கலம் அளித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT