

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக மோடி பிரதமரானால் இந்தியாவின் அமைதி சீரழிந்துவிடும் என பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து பாஜக மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் வலைபக்கத்தில் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அதில், மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.