Last Updated : 16 Apr, 2015 11:01 AM

 

Published : 16 Apr 2015 11:01 AM
Last Updated : 16 Apr 2015 11:01 AM

படுத்துக்கொண்டே இருக்க ரூ.10 லட்சம்!- நாசா வழங்குகிறது

படுத்துக்கொண்டே ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு. ஆம். இந்த வேலைக்குத் தேர்வு செய்யப் படுபவர் செய்ய வேண்டிய தெல்லாம் படுத்துக்கொண்டே இருப்பதுதான்.

எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் அதனை படுக்கையில் இருந்தபடியே செய்ய வேண்டும். அப்படியான வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 18 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.10 லட்சம்) ஊதியமாக வழங்க உள்ளது.

புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில், விண்வெளியில் ஆய்வு செய்யும் வீரர்கள் பலருக்கு தசை, எலும்பு போன்றவை வலுவிழந்து விடும். எனவே, அதைத் தடுப்பதற்கு அவர்களுக்கு உடற்பயிற்சிகள் அளித்தால், அது எந்த அளவு பலனைத் தரும் என்பதை நாசா ஆய்வு செய்ய உள்ளது.

இந்த ஆய்வுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர் களை நாசா எதிர்பார்க்கிறது. அதற்காககத்தான் மேற்கண்ட அறிவிப்பை அது வெளியிட் டுள்ளது.

இந்த ஆய்வுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 70 நாட்களுக்குப் படுக்கையில் இருக்க வேண்டும். முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, படுக்கை அமைக்கப்பட்டுள்ள சின்ன அறையில் தங்கள் நாட்களைக் கழிக்க வேண்டும்.

அடுத்த 10 வாரங்கள், தலை கீழாகவும், கால் மேலாகவும் இருக்கும்படி அவர்கள் படுக்கை யில் கட்டி வைக்கப்படுவார்கள். உண்பது, கழிப்பது என எந்த வேலையையும் அவர்கள் படுக்கையில் இருந்தபடியே மேற்கொண்டாக வேண்டும்.

அடுத்த 14 நாட்களுக்கு பஸ்கி எடுத்தல், சைக்கிள் ஓட்டும் பயிற்சி மற்றும் நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அவர்கள் படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்கிறபோது, அவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவதற்கு, தினமும் அளவீடுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வு நடைபெறும் சூழல் விண்வெளியில் இருப் பதைப் போலவே இருக்கும் என்ப தால், இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று நாசா எதிர்பார்க்கிறது.

இந்த அறிவிப்பில் நாசா குறிப்பிட்டுள்ள ஒரே நிபந்தனை, இந்த ஆய்வுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் அமெரிக்க குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஒருவராகவோ இருக்க வேண்டும் என்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x