Published : 26 Apr 2015 10:16 AM
Last Updated : 26 Apr 2015 10:16 AM

பசுபதிநாதர் ஆலயம் தப்பியது

நேபாளத்தில் நேற்று நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கோயில்கள், புராதன சின்னங்கள் அழிந்தன. இதில் அதிசயிக்கத்தக்க வகையில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பசுபதிநாதர் கோயில் எவ்வித சேதமுமின்றி தப்பியது.

காத்மாண்டுவில் அமைந்திருந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான தர்பார் சதுக்கம், புராதன சின்னமாக திகழ்ந்த தரஹரா கோபுரம் ஆகியவை இடிந்து தரைமட்டமாகின. எனினும் காத்மாண்டுவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த கோயில் யுனெஸ்கோவின் புராதன சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x