Last Updated : 06 Apr, 2015 02:16 PM

 

Published : 06 Apr 2015 02:16 PM
Last Updated : 06 Apr 2015 02:16 PM

மலேசிய தலைநகரை தாக்க சதி: 17 பேர் கைது

மலேசிய தலைநகரை தாக்க திட்டமிட்டதாக தீவிரவாதிகளுக்கு தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 பேரை கைது செய்ததாக அந்நாட்டு தலைமை காவல் ஆணையர் கலீத் பக்கர் தெரிவித்தார்.

இதில் இருவர் சிரியாவில் பயிற்சி பெற்று நாடு திரும்பியது உறுதியாகியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீப காலமாக ஐ.எஸ். இயக்கத்திடமிருந்து பயிற்சி பெற்று மலேசியாவில் புகும் நபர்களை கண்டறிந்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x