Last Updated : 21 Apr, 2015 03:52 PM

 

Published : 21 Apr 2015 03:52 PM
Last Updated : 21 Apr 2015 03:52 PM

எகிப்து முன்னாள் அதிபர் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை

எகிப்த்தில் போராட்டக்காரர்களை கொன்ற குற்றத்துக்காக அந்நாட்டு முன்னாள் அதிபர் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் ஆட்சி காலத்தின்போது அவருக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2012-ல் தலைநகர் கெட்ரோவில் மாபெரும் முற்றுகை பேரணி நடத்தப்பட்ட போது, அதனை தடுக்க மொர்சிக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதனை அவர்கள் ஏற்க தவறியதால், தனது ஆதரவாளர்களை விட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதில் போலீஸார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

தொடர் போராட்டங்கள், சர்வதேச அழுத்தங்களை அடுத்து, அவரது பதவியை 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவம் வலுக்கட்டாயமாக கைபற்றி, அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் அதிகாரத்தை செயலிழக்க செய்தது.

போராட்டக்காரர்களை விட்டு படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

இவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் முதல் வழக்கு இதுவாகும். இதில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஏற்கெனவே நடந்து வரும் வழக்குகளில் மொர்சி மற்றும் அவருக்கு ஆதரவான 14 சகோதரத்துவ கட்சியினர் தப்பித்தனர். அந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் மொர்சி உள்ளிட்டோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x