Last Updated : 14 Mar, 2015 02:54 PM

 

Published : 14 Mar 2015 02:54 PM
Last Updated : 14 Mar 2015 02:54 PM

இலங்கையில் மகாபோதி மரத்தை வழிபட்டார் பிரதமர் மோடி

இலங்கைக்கு 2 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனுராதபுரத்தில் உள்ள மாகாபோதி மரத்தை வழிபட்டார். மரத்துக்கு முன்னர் மண்டியிட்டு வழிபட்டார்.

அவருடன் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் சென்றார். பிரதமர் மோடி, அங்குள்ள மாகாபோதி மரத்தை வழிபட்ட பின்னர் சுமார் 30 நிமிடங்கள் அங்கு இருந்தார்.

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் அனுராதபும் போகிறேன், அத்துடன் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் இன்று செல்லவுள்ளேன். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வரலாற்றின்படி, பிஹாரின் புத்த கயாவில் உள்ள மகோபோதி மரத்தின் ஒரு கிளையை பேரசரர் அசோகரின் மகள் சங்கமித்ரா இலங்கையில் அனுராதபுரத்துக்கு கொண்டுவந்ததாக ஒரு கூற்று இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x